search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசக்கியம்மன் கோவில்"

    • மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னப்படைப்பு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
    • திருவனந்தபுரம் மஞ்சப்ப டையின் சிறப்பு சிங்காரி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது

    நாகர்கோவில், ஆக.3-

    சுசீந்திரம் அருகே ஆசிராமம் பகுதியில் சங்கிலி பூதத்தான், இசக்கியம்மன், மாடன்தம்புரான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (3-ந்தேதி) தொடங்கி வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கடந்த 28-ந்தேதி திருக்கால் நாட்டுடன் கொடை விழா தொடங்கியது. விழாவையொட்டி இன்று காலை தீபாராதனை, நையாண்டி மேளம் ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு குடியழைப்பு சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கி றது.

    நாளை (4-ந்தேதி) காலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6 மணிக்கு கலச பூஜை, 6.30 மணிக்கு அஷ்டாபிஷேகம் தொடர்ந்து களபம் சார்த்துதல் நடக்கிறது. 9 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், தொடர்ந்து வில்லிசை நடக்கிறது. 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு, 11 மணிக்கு சாஸ்தா சுவாமிக்கு தீபாராதனை, தொடர்ந்து கோவில் குளத்தில் இருந்து கும்ப நீர் எடுத்து கோவில் வந்தடைதல் ஆகியவை நடக்கிறது. மதியம் மகா தீபாராதனை, அன்னதானம், உஜ்ஜியினி மாகாளியம்மனுக்கு பொங்கல் வழிபாடு, அலங்கார தீபாராதனை, மேளம், கரகாட்டம், வில்லிசை, இரவு அலங்கார தீபாராதனை, ஊட்டு படைத்தல், மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னப்படைப்பு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.

    நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை மங்கல இசை, மதியம் 1 மணிக்கு மஞ்சள் பாலுக்கு அக்னி மூட்டுதல் அம்மன் மஞ்சள் பால் குளியல், பூப்படைப்பு தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது. கோமரத்தார்கள் மஞ்சள் நீராட ஊர் சுற்றி வலம் வருதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.

    5-ந்தேதி முழுவதும் திருவனந்தபுரம் மஞ்சப்படையின் சிறப்பு சிங்காரி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 11-ந்தேி 8-ம் கொடை விழாவை முன்னிட்டு காலை அஷ்டாபிஷேகம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, தீபாரா தனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.

    ஆடி மாதம் முழுவதும் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் இரவு 8 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    • கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
    • என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கொடை விழா நிகழ்ச்சியில் நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பக்திகானமும், 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தீப லெஷ்மி பூஜையும், புண்ணியாக வாசனம் பூஜையும், பஞ்கவ்ய பூஜையும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும், 12.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்,

    மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள் காப்பு மற்றும் மாகாப்பு பூஜையும், 8. 15 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு குடியழைப்பு பூஜையும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் 10-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பக்தி கானமும், 8.30 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 2 மணிக்கு அன்னதானமும்,

    மாலை 6 மணிக்கு வில்லிசையும், இரவு 8.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு பூஜையும், 9 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது.

    11-ந் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வில்லிசையும், காலை 6 மணிக்கு வன்னியடி மறவர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    ×